சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவிகளுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டதுடன் புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின கொடி விற்பனையையும் ஆரம்பித்து வைக்கப்பட்;டது.
‘புகைத்தலிலிருந்து மீண்ட ஒரு கிராமம் மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் தேசம்’ எனும் தொணிப்பொருளில், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரனின் ஒருங்கிணைப்பில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கிருபாகரன் தலைமையில்
இடம்பெற்ற விழிப்பூட்டல் கருத்தரங்கில் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் ஆயுர்வேத வைத்தியர் சித்தி சாமிலா வளவாளராக கலந்து கொண்டு போதைப்பொருள் பாவனையின் தாக்கம் அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விரிவான விளக்கமொன்றை வழங்கினார்.
புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின கொடி ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் சுபாகருக்கு அணிவிக்கப்பட்டதுடன் ஏனைய பிரிவுத்தலைவர்களுக்கும் அணிவிக்கப்பட்டு கொடி விற்;பனை ஆரம்பிக்கப்பட்டது.
;நிகழ்வுகளில் சமுர்த்தி சமூக அபிவிருத்திக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுதாய அடிப்படைய அமைப்புக்களின் தலைவிகள் என பலர் கலந்து கொண்டனர்.