கதிர்காம யாத்திரிகர்களுக்கு, அம்பாறை காரைதீவில் கால் கழுவி பெரு வரவேற்பு!

0
325

யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு, அம்பாறை காரைதீவிற்கு வருகை தந்த, ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 26 நாட்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு. திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கடந்து காரைதீவிற்கு வருகை தந்த
போது மஞ்சள் நீரால் கால் கழுவி வரவேற்பளிக்கப்பட்டது.
பாதயாத்திரை குழுவின் ஆலோசகர் சகாதேவராஜா தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் ஜெகராஜன், மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் ஜெயராஜ் வரவேற்றதுடன், கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு முருகபக்தர் தேவதாஸ் நீராகாரம் வழங்கினார்.
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தை தரிசித்த யாத்திரை குழுவினர், எதிர்வரும் 11ஆம் தேதி உகந்தை மலையை அடைந்து 12ஆம் தேதி காட்டுப் பாதையினுள் பிரவேசிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.