யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் அமைந்துள்ள தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில், எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் நேற்றையதினம் பொஸன் வழிபாடு இடம்பெற்றது.
வணக்கத்திற்குரிய கிங்தோட்ட நந்தராம தலைமையில் பொஸன் வழிபாடு நடைபெற்றது.
பௌத்த மற்றும் இந்து மக்கள் பலர் பொசன் வழிபாட்டில் கலந்துகொண்டனர். வழிபாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.