அம்பாறை நாவிதன்வெளியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான கருத்தரங்கு

0
171

போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது உறவுகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில், அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அல்-அமானா சமூக சேவை அமைப்பின் தலைவருமான எம்.வி நவாஸ் தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது.

அதிகளவான பெண்கள் கலந்து கொண்ட இப்போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீருக்கு நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அல்-அமானா சமூக சேவை அமைப்பின் தலைவருமான எம்.வி நவாஸ் தலைமையில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.நபீர், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் இளைஞர் குழு தலைவர் எஸ்.சஹாப்தீன், ரீ.எம் றிபாஸ் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் போதைப்பொருளின் தாக்கங்கள், போதைப்பொருள் பாவனையை எவ்வாறு தடுப்பது, போதைப்பொருள் பொருளாதாரத்தை எவ்வாறு சீரழிக்கின்றது, உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அதிதிகள் உரைகளை நிகழ்த்தினர். நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனை காதி நீதவானுமான எப்.​​எம்.அமீருல் அன்சார் மௌலானா, சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.எம்.எஸ்.கே தசநாயக்க, பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.அப்துல் கபூர், சவளக்கடை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகருமான ஏ.எம் ஜவ்பர் என பலர் கலந்து கொண்டனர்.