அமரர் சிவசிதம்பரத்தின் 21வது நினைவேந்தல் இன்று காலை நெல்லியடியில் அமைந்துள்ள அவரது நினைவு சதுக்கத்தில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய செயலாளர் இ.ராகவன் தலமையில் இடம்பெற்றது.
முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுரை இடம்பெற்றது.
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சி பொதுச் செயலருமான எம்.கே.சிவாஜிலிமக்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உட்பட அரசியல் பிரமுகர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.