கொழும்பு – குருணாகல் பிரதான வீதியின் துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
முச்சக்கரவண்டியொன்றும், டிப்பரொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தை, 39 வயதுடைய தாய், மற்றும் 13 வயது மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.