உலக சாதனைக்கான புதிய முயற்சிக்காக மலையகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து காலி முகத்திடல் நோக்கிய நடைபயணத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய தயாபரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இரட்டையர்களே இந்த நடைபயணத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஓய்வெடுக்காமல் குறுகிய காலத்தில் இந்த பயணத்தை நிறைவு செய்துஇ சாதனையை நிலைநாட்டும் நோக்கில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இவர்கள் தமது நடைபயணத்தை ஆரம்பித்தனர்.
இதற்கமையஇ குறித்த இரட்டையர் ஜோடி இன்று மதியம் காலி முகத்திடலை அடைந்து தமது சாதனையை நிலைநாட்ட எதிர்ப்பார்த்துள்ளனர்.