வவுனியா – மறவன்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாலத்திற்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
சம்பவத்தில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த 61 வயதான பெண்ணே உயிரழந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.