மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியை
முன்னிட்டு, மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் நிகால் அஹமத், பாடசாலை முன்றலில் வைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
காத்தான்குடி மத்திய கல்லூரியில் மூன்று இல்லங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள் இந்த மரதன் ஓட்ட
போட்டியில் பங்கு பற்றினர்
நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்