பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக திருக்கோவில் காவல் துறையினர் தெரிவித்தனர்.
உகந்த முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றுக்கொண்டிருந்த வேளையில் குமுக்கன் வனப்பூங்கா பகுதியில் பாம்பு தீண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில் குமுக்கன் பகுதியில் பாத யாத்திரிகர்களுக்காக நடமாடும் வைத்திய சேவையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் நோயாளர் காவு வண்டியில் திருக்கோயில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.