பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

0
123
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் புதிய தலைவராக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பரண ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.களனி பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, அவர் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் புதிய செயலாளராக கலாநிதி அத்துலசிறி சமரகோன் இதன்போது தெரிவு செய்யப்பட்டார்.இந்த சம்மேளனத்தின் புதிய பொருளாளராக கலாநிதி அநுருத்த கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் புதிய ஊடகப்பேச்சாளராக, முன்னாள் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.