சனி, ஞாயிறு தினங்களில் நாடாளுமன்றை கூட்டுவதற்கான வர்த்தமானி வெளியீடு

0
168

எதிர்வரும் சனிக்கிழமை நாடாளுமன்றத்தின் விசேட அமர்வை கூட்டுவதற்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளின் 16ஆம் நிலையியல் கட்டளைக்கு அமைய சபாநாயகர் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டவுள்ளார்.

முன்னதாக உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஒப்புதல் பெறுவதற்காக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.