அம்பாறை கல்முனையில் நலன்புரி உதவித்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தகவல்களை அனுப்பும் நடவடிக்கை

0
437

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் நலன்புரி உதவித்திட்டங்களில் முறைகேடுகள் உள்ளன என பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி, கல்முனை காரியாலயத்தில் நேற்று முதல் இணையத்தளத்தின் மூலம் தகவல்களை
அனுப்ப றகுமத் பவுண்டேசன் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் தகவல்களை அனுப்பி வருவதுடன், சேவையைப் பெற்ற பாதிக்கப்பட்ட மக்கள் றகுமத் பவுன்டேசனுக்கும் அதன்
தலைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.