பொலிஸ்மா அதிபராக சி.டி விக்ரமரத்ன!

0
227

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி நாளை அல்லது நாளை மறுதினம் அவர் பணிக்கு சமூகமளிக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்ந்த மார்ச் 25ஆம் திகதி அவர் ஓய்வுபெறவிருந்த நிலையில் ஜனாதிபதி 3 மாதகாலம் அவரது சேவையை நீடித்திருந்தார்.

இந்த சேவை நீடிப்பு ஜூன் 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் அவருக்கு மேலும் மூன்று மாதங்கள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.