ஜனாதிபதியை சந்திக்கிறது தமிழரசு கட்சி

0
159

இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்துக்கு முன்பதாக தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி ரணில் விகாமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.

இச் சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பின் போது அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறு, ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாக, சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டி தமிழ்த்தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதுடன், இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமது நிலைப்பாடுகளை நேரடியாகவும் அறிவித்துள்ள நிலையில், செவ்வாய் பிற்பகல் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.