பாண்டிருப்பு காளி கோவில் மண்டபத்தில் அம்பாறை மாவட்ட ஹிந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில்,
இந்து சமய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
அறநெறிப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்து சமய சடங்குகள், சம்பிரதாயங்கள், தத்துவங்கள், நாயன்மார்கள், சித்தர்கள், சமய,சமூக வாழ்வியல் தொடர்பில் அறிவூட்டும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் இந்து சமய ஆசிரிய ஆலோசகர் எம்.லக்குணம், இந்து ஸ்வயம் சேவக சங்க கிழக்கு மாகாண பிரச்சாரர் கே.வரதராஜன், ஆசிரியர் கே.ஆர்.தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.