

நடன துறையில் ஆர்வம் உள்ள இளைஞர் யுவதிகளின் திறமையை மெருகேற்றும் விதமாக மாவட்ட ரீதியாக உள்ள சிறுவர், சிறுமியர், இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து இரண்டு நாள் நடன பயிற்சி பட்டறை மன்னாரில் இடம்பெற்றது.
மன்னாரிலுள்ள நடன பயிற்சி கல்லூரி ஒன்றின் ஒழுங்கமைப்பில் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
இதன்போது மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேற்கத்திய, பாரம்பரிய, நாட்டுப்புற நடனங்களுக்கான பயிற்சிகள் இதனூடாக ஊடாக தெளிவுபடுத்தப்பட்டதுடன் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வௌ;வேறு பிராந்தியங்களில் குறித்த பயிற்சி பட்டறைகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.