புகையிரத சாரதிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழில் சங்க நடவடிக்கை காரணமாக ரயில் போக்குவரத்து சேவைக்கு தடை ஏற்பட்டுள்ளது.
அதன்படி நேற்று இரவு போக்குவரத்தில் ஈடுபடவிருந்த 8 புகையிரதங்களும் இன்று காலை போக்குவரத்து சேவையில் ஈடுபடவிருந்த 8 அலுவலக புகையிரதங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத சாரதிகளின் பிரச்சினைகளை முன்னிறுத்தி புகையிரத சாரதிகளால் இவ்வாறு தொழில் சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.