IELTS பரீட்சை பணிப்பாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

0
217

பிறிட்டிஸ் கவுன்சில் நிறுவன ஐஈஎல் ரிஎஸ் பரீட்சை பணிப்பாளர் 

ஸ்ரொமினி கட்சன்யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார்

வட பகுதி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதில் பிரிட்டிஷ் கவுன்சில் எவ்வாறு உதவி புரிகின்றது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று ஆஸ்பத்திரி வீதியில் உள்ள காகீல்ஸ் அலுவலகத்தில் இடம்பெற்றது குறித்த கலந்துரையாடலில் பரீட்சை ஐ ஈ எல் ரீ எஸ் பணிப்பாளர் மற்றும்பிரிட்டிஸ் கவுன்சில் நிறுவன பிரதிநிதிகள் பங்குபற்றினர்,

குறித்த கலந்துரையாடலின்பின்  கருத்து தெரிவித்த

பிரிட்டிஸ் கவுன்சில்  ஐஈஎல் ரிஎஸ் பரீட்சை பணிப்பாளர் 

ஸ்ரொமினி கட்சன்

கடந்த 2019 ம் ஆண்டில் இருந்து கொரோனா நெருக்கடி  மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து பலர் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது 

சிலருக்கு  இந்த நாட்டில் இருந்து வெளியேறுவதற்கான தேவையுள்ளது அவ்வாறு செல்வோர் கட்டாயமாக ஆங்கில மொழியில் தேர்ச்சி உள்ளவர்களாக இருக்க வேண்டும் ஆங்கில மொழியானது கட்டாயமானது

அத்தோடு வேறு நாடுகளில் வேலை தேடுபவர்களும்உள்ளார்கள் அவ்வாறானவர்கள் ஐஈ எல் ரிஸ் ஆங்கில கற்கையினை  கற்று பரீட்சையில் சித்தியெய்தி வெளிநாடுகளுக்கு செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது

 குறிப்பாக இந்த பயிற்சிநெறியானது ஆங்கில மொழியினை விருத்தி செய்வதற்காகவும் ஆங்கில மொழி திறன் தொடர்பான தகைமையினை அறிய உருவாக்கப்பட்டது 

 புலம்பெயர்கின்ற அனைவருக்கும் இந்த மொழிப்பரீட்சையானது முக்கியமானது  இலங்கையில் பிரிட்டிஷ் கவுன்சில் பல நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையினை செய்து வருகின்றது.

 இந்த சேவையில் பலர் பயனடைந்து வருகின்றார்கள் அந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஐ ஈ எல் ரீஎஸ் கற்கை நெறியினை  செயற்படுத்துவோர்  எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்து அவர்களுடன் கலந்துரையுள்ளேன் என்றார்