மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம்
தலைமையில் இன்று இடம்பெற்றது.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள், மாதர் சங்கங்கள்,
கிராம அபிவிருத்தி சங்கங்கள், ஏறாவூர் நகர இளைஞர்கள் என பலர் தமது இரத்த தானம்
செய்தனர்.