Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81 ஆயிரத்து 162 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 80 ஆயிரத்து 247 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.வறட்சியினால் இதுவரை 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இதுவரை பெறப்பட்ட நீர் மாதிரிகளின் படி, எந்தவொரு நிலத்தடி நீரும் அருந்துவதற்கு உகந்தது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 18 ஆயிரத்து 992 குடும்பங்களை சேர்ந்த 63 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் ஊவா மாகாணத்தின், மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் 6 ஆயிரத்து 253 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் 6 ஆயிரத்து 367 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 21 ஆயிரத்து 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.