Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீரவை இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்குள் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹொரணை நீதவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கின் மேலதிக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவே தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஹொரணை பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பில், அந்த தொழிற்சாலையினது பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவருக்கு எதிராக சாட்சியங்களை உருவாக்கி சதி செய்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.ஹொரணை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மற்றும் பாணந்துறை மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் வலுவற்றதாக்குமாறு கோரி, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மேன் முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, பிரதிவாதிகளை எதிர்வரும் 14ஆம் திகதி முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.