அனுமதிப்பத்திரத்திற்கு முரணாக மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

0
123

கிளிநொச்சியில், அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில், இரண்டு டிப்பர் வாகனங்கள், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியிலிருந்து, அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிப் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்கள் கைபற்றப்பட்டுள்ளன.

இராணுவத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, இராணுவத்தினரால், டிப்பர் வாகனங்கள் இரண்டும் வைக்கப்பற்றப்பட்டதுடன், சாரதிகளும் கைதுசெய்யப்பட்டு, தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.