கரடியின் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர்!

0
96

வவுனியா – சிதம்பரபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரபுரம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற குடும்பஸ்தர் மீது நேற்று கரடி தாக்கியுள்ளது.

கரடியின் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் தனது ஒரு கண் பார்வையை இழந்துள்ளதுடன், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

கரடியின் பிடியிலிருந்து தப்பிவந்த அவரை அயலவர்கள், வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா – சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.