ஐக்கிய தேசியக் கட்சி இன்று 77ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

0
146
ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது ஆண்டு நிறைவை விழா இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய நிகழ்வுகள் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று காலை இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இலகுவாக இணையும் வகையில், கட்சியை டிஜிட்டல் மயமாக்கும் வகையில், இந்த ஆண்டு நிறைவு தினத்துடன் இணைந்ததாக தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி 1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி இலங்கையின் முதல் பிரதமரான டொன் ஸ்டீபன் சேனாநாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்டது.ஐக்கிய தேசியக் கட்சி தனது 77ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான பாரிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார்.நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அதிக எண்ணிக்கையிலான முற்போக்கான சீர்திருத்தங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்திய கட்சியாகவும் ஐ.தே.க.உள்ளது .