Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் கிட்டத்தட்ட 63,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.செப்டெம்பர் 12ஆம் திகதி வரை நாட்டில் 62,935 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் படி, கொழும்பு மாவட்டத்தில் 13,320 டெங்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இன்று காலை நிலவரப்படி கம்பஹாவில் 13,180 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.மேலும், களுத்துறை மாவட்டத்தில் 4,096 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இதன்படி, இந்த வருடம் மேல் மாகாணத்தில் 30,596 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.கண்டி மாவட்டத்தில் இன்று காலை வரை 5,295 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.ஜூன் மாதத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஜூன் மாதத்தில் மொத்தம் 9,916 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மே மாதத்தில் 9,696 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன.செப்டெம்பர் மாதத்தில் 1,057 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 10 பிரதேசங்களை டெங்கு அபாய வலயங்களாக அறிவித்துள்ளது.கடந்த சில வாரங்களில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் கடும் மழையுடன் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.