இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகாவான, ஆஸாத் மௌலான மீது, திருமண மோசடி வழக்குப் பதிவு..

0
185

சனல்-4 தொலைக்காட்சி ஊடாகஇ ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளஇ தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளர் ஆஸாத் மௌலானாவிற்கு எதிராக அம்பாறை கல்முனை நீதிவான் நீதிமன்றில் திருமண மோசடி தொடர்பில்இ பெண் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரே தனது சகோதரர் சகிதம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து ஆஸாத் மௌலானா மீது முறைப்பாடு மேற்கொண்டார்.

இந்த முறைப்பாட்டிற்கமைய இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்இ கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரை குறித்த வழக்கினை ஒத்திவைத்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளராக நீண்ட காலம் செயல்பட்ட ஆஸாத் மௌலானாஇ சேனல் 4 ஆவணப்படத்தில் வெளியிட்ட தகவல்கள்இ இலங்கை அரசியலிலும் அதற்கு வெளியிலும் கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில்இ ஆஸாத் மௌலான மீது திருமண மோசடி வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.