‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஒன்றாகச் சென்று சந்திக்கும் முயற்சியை மேற்கொள்வோம் என தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில், ‘தமிழ்த் தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கேட்பது பயனுள்ளதாக இருக்குமா என்று யோசிக்கின்றேன். அவர் தென்மாநிலங்களுக்குச் செல்லும்போது அவரைச் சந்திக்கலாம். உங்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டால், அனைவரும் கையொப்பமிட்டு அனுப்பக்கூடிய ஒரு கடித நகலை நான் தயாரிக்கலாமா என்பதை தெரிவிக்கவும். கஜேந்திரகுமார் 13ஆவது திருத்தத்தின் பலனை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எங்களது கூட்டு நடவடிக்கைக்குத் தனது ஒப்புதலை காட்டுவதற்காக எங்களுடன் வர முடியும். நாம் யாரும் மோடியைத் தனித்தனியாகச் சந்திப்பதில் பயனில்லை. நீங்கள் ஒப்புதல் அளித்தால் சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்தலாம். மூன்று நாள்களுக்குள் பதிலளிக்கவும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.