இந்தியா, தமிழ்நாடு நாகபட்டினம் துறைமுகத்திலிருந்து – யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்துக்கு எதிர்வரும் ஒக்ரோபர் 15ஆம் திகதிக்கு முன்பாக கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதையடுத்து முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளையும், சுங்கத்துறைக்கு சொந்தமான படகில் கடலுக்குள் சென்று தமிழ்நாட்டு அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், நாகபட்டினம் சிறுதுறைமுகத்திலிருந்து, இலங்கையிலுள்ள காங்கேசன்துறை துறை முகத்துக்கு ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.