உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால் உள்ளக விசாரணை மட்டுமே போதுமானதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தலைவர்கள் நேர்மையான அதிகாரிகள் மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக்கொண்டால், அரசியல் அழுத்தத்தின் கீழ் ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொள்ளாவிட்டால் சர்வதேசத்திற்கு செல்லவேண்டிய அவசியமில்லை. ஆகவே, இவை அனைத்தும் வெளிப்படையான வழிமுறைகளின் மூலம் செய்யப்பட வேண்டும்’ என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.