Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
நிலத்தில் ‘சுழற்காற்று’ நிலை அல்லது நீரில் சுழற்காற்று, வெள்ளம் ஏற்பட்டால் அதன் அருகில் கூட செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.இந்த சூறாவளி மற்றும் சுழற்காற்றுகளின் பொது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதால் இது ஆபத்தான நிலை என்றும் இதன்போது அருகிலுள்ள அனைத்தும் இதில் இழுக்கப்படும் , எனவே இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது, புகைப்படம் எடுப்பது அல்லது வீடியோ பதிவு செய்வது போன்ற ஆபத்தான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) பம்பலப்பிட்டிக்கு அண்மித்த கடற்பகுதியில் ஏற்பட்ட தும் அவ்வாறானதொரு ஆபத்தான நிலையே என அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் வறண்ட காலநிலையின் பின்னர் பலத்த மழை பெய்யும் போது இத்தகைய நிலைமை உருவாக்கப்படுகிறது. இந்த மேகங்களுக்குள் குறைந்த அழுத்த மண்டலங்கள் உள்ளன. வால் தொடும் பகுதியில் உள்ள அனைத்தும் குறைந்த அழுத்த மண்டலத்திற்குள் இழுக்கப்படுகின்றன.பெரும்பாலும், அத்தகைய அமைப்பு கடல் நீர் அல்லது மற்றொரு நீர் பகுதியில் உருவாக்கப்பட்டால், அந்த நீர்த்தேக்கத்தில் உள்ள மீன் மற்றும் பிற விலங்குகள் இந்த மேகத்திற்குள் இழுக்கப்படுகின்றன. அந்த மேகத்திலிருந்து மழை பெய்யும்போது, அந்த மீன் தரையில் விழுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைக்குத்தான் ‘மீன் மழை பெய்கிறது’ என்று சொல்வார்கள்.வால் போன்ற ஒரு மேகம் உருவாகும்போது, ஒரு வெற்று தரையில் நிற்கும் ஒரு நபர் கூட இந்த மேகத்தால் மேலே இழுக்கப்படலாம் அதுமட்டுமின்றி, சுற்றிலும் உள்ள விலங்குகள் மற்றும் வாகனங்கள் கூட இந்த மேகத்தால் மேலே இழுக்கப்படலாம் . எனவே எக்காரணம் கொண்டும் அதன் வால் அருகில் சென்ல வேண்டாம் . இவ்வாறானதொரு நிலை ஏற்படும் பட்சத்தில் அபாயகரமான செயல்களைச் செய்வதைத் தவிர்க்கவும்” என அவர் மேலும் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சூறாவளியால் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரையும் அதனைச் சுற்றியுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.