பொது முடக்கம் தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தன் அறிக்கை

0
176

பொது முடக்கத்திற்கு விடுத்த அழைப்பை மீளப் பெறவேண்டும் என ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

போராட்டங்களால் தொடர்ச்சியாகப் பொருள் இழந்து, ஊக்கம் இழந்து, மெது மெதுவாக மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தாயகத்தின் ஏழைகளான 8 இலட்சம் குடும்பத் தலைவர்கள் மீது, பொருளாதார சுமையை ஏற்றாதீர்கள் என தெரிவித்துள்ள அவர் 25 ஆயிரம் சதுர கிலோமீற்றர் நீண்டு, அகன்ற தமிழர் தாயகத்தை 5, 6 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் முடக்க முயலாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

பொது முடக்கத்தைக் கோராமல் போராட்ட உத்திகளை மாற்றுங்கள், இயல்பு வாழ்க்கையைக் குழப்பாமல், மீள் வளர்ச்சியை வீழ்த்தாமல் போராட்ட உத்திகளைத் தீர்மானியுங்கள், பொதுமுடக்க அறிவிப்பை மீளப் பெறுங்கள் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.