ரயிலில் ஏறியபோது தவறி விழுந்தவர் உயிரிழப்பு

0
141

யாழ்ப்பாணம் தென்மராட்சி தச்சன்தோப்பு ரயில் நிலையத்தில் கடந்த 8ம் திகதி இரவு ரயிலில் ஏறிய போது, தவறி தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான 69 வயதான மாணிக்கம் விஜயரட்ணம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.