வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
வவுனியா தெற்கு ஆசிரிய ஆலோசகர் கே.உதயகுமார் தலைமையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
அதிதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அதிதிகளால் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர்களின் உரை இடம்பெற்றது.
நிகழ்வின் தொடர்ச்சியாக வவுனியா மாவட்டத்தில் உயர் சித்திகளைப் பெற்ற தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் அதிதிகளால் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விசேடமாக மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் நடராசா நிசாந்தன் மற்றும் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் விமலராஜா விதுவர்சன் ஆகியோருக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா தெற்கு கல்விப் பணிப்பாளர் சுரேந்திரன் அன்னமலர், வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசன், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.