தேசிய பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் இடைக்கால அறிக்கை பிரதமரிடம்

0
222

இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை தீர்மானிக்கவும், அடையாளம் காணவும் ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான இடைக்கால அறிக்கை விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

இந்த இடைக்கால அறிக்கைக்கு அமைய முன்வைக்கப்படும் முன்மொழியப்பட்ட வழிமுறைகள் பொதுமக்களின் கருத்து கோரலுக்காக எதிர்வரும் 8ஆம் திகதி நாளிதழ்களில் பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது.

தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் கோரிக்கைக்கு அமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை தீர்மானிக்கவும் அடையாளம் காணவும் ஒரு வழிமுறையை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றுக்கொண்டார்.

அதற்கமைய தேசிய பாரம்பரியத்தை தீர்மானிக்கவும், அடையாளம் காணவும் உரிய வழிமுறையைத் தயாரிப்பதற்கு 16 நிபுணர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் அறிக்கையே நேற்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.