இறக்குமதி செய்யப்படும் சீனி வரி அதிகரிப்பினால் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கான வரியை 25 சதத்தில் இருந்து 50 ரூபாவாக உயர்த்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.வரித் திருத்தத்துடன் சந்தையில் இன்று காலை நிலவரப்படி சீனியின் விலை 300 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா சதொசவில் கூட இன்று காலை சீனியின் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட சீனியின் விலை 350 ரூபாவாக காணப்பட்டதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சீனி 320 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.