மட்டக்களப்பு மாவட்டத்தில் கனரக வாகன இயக்குனர் பயிற்சி நெறியை நிறைவு செய்த 25 பேருக்கு, இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்
சான்றிதழ்களை வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின்போதே, சான்றிதழ்கள்
வழங்கப்பட்டன.
இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் பணிப்புரையின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம், தொழில் வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களுக்கு
தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக கனரக வாகன இயக்குநர் பயிற்சியை வழங்கியிருந்தது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவில் இருந்து இளைஞர்கள் இந்தப் பயிற்சி நெறியில் பங்கேற்றனர்.