01.57 pm : ஜனாதிபதியின் உரை நிறைவு
01.56 pm : இந்த வரவு செலவுத் திட்டத்தை அமுல்படுத்த் பங்காளர்களாகுமாறு எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
01.56 அவ்வாறில்லாவிடின் உங்களிடம் உள்ள திட்டங்களை முன்மொழியுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
01.54 pm : நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்துக்கு உதவுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.
01.53 pm : நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்தால் எந்தவொரு நாடும் மீட்டெடுக்க முன்வரப்போவதில்லை. அவ்வாறான நிலைமைக்கு நாம் செல்ல வேண்டுமா என எதிர்க்கட்சியிடம் நான் கேட்கிறேன்.பிறரிடம் தங்கியிருக்கும் சமூகமாக நாம் தொடர்ந்தும் வாழ முடியாது
01.52 pm : இலங்கை காலநிலைமாற்ற ஆணைக்குழுவினை தாபிப்பதற்கான காலநிலை மாற்ற சட்டத்தின் சட்டமூலத்திற்கான பூர்வாங்க ஆவணம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
01.47 pm : சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு புதிய சட்டம்
01.46 pm : 2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொதுக் கடன் 95 வீதமாகக் குறைக்க எதிர்பார்ப்பு
01.41 pm : பொதுமக்கள் செயலகங்களை அமைப்பதற்கு 700 மில்லியன் ரூபா
01.38 pm : இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்த நடவடிக்கை
01.34 pm : நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் புதிய சட்டங்கள் பலவற்றினை அறிமுகம் செய்வதற்கும் தற்பொழுதுள்ள பழைய சட்டங்களை திருத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
01.31 pm : வங்கி முறையின் மூலதன மேம்பாட்டு செயல்முறையை ஆதரிக்கும் வகையில் ரூபா 450 பில்லின் ஒதுக்கீடு
01.31 pm : நீண்டகாலத்திற்கான வங்கித்துறையின் ஸ்திரத்தன்மை தொடர்பான அனைத்து விவேகமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.
01.29 pm : வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பினைச் செயல்படுத்துவதற்கும்,சர்வதேச இறையாண்மை, முறிகளை வெளிநாட்டுபடுகடன் மறுசீரமைப்பின் கீழ் தீர்த்துவைப்பதற்கும் ரூபா 3,000 பில்லியன்
01.28 pm : இந்திய முதலீட்டாளர்களுடன் இணைந்து இந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை முன்கொண்டு செல்ல முடியும். நிகழ்ச்சித்திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு சனாதிபதி செயலணியொன்றை அமைப்பதற்கு முன்மொழிகின்றேன்.
01.28 pm : விசேடமாக துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.
01.28 pm : நாட்டின் பிரதான பொருளாதார நிலையமாக திருகோணமலை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
01.27 pm : இந்தநாட்டில் இரத்தினக்கல் கைத்தொழிலில் காணப்படுகின்ற பிரச்சினைகளை கவனத்தில் கொண்டும் பெறுமதி சேர்ப்புக்காக வெளிநாடுகளில் இருந்து இரத்தினக்கல் இறக்குமதி தொடர்பிலும், பொதுவான நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டும்.
01.26 pm : மக்கள் சபை முறைமையின் ஊடாக வள ஒதுக்கீட்டை மேற்கொள்ள நடவடிக்கை
01.24 pm : அனைத்து மாகாணங்களிலும் கைத்தொழில் சேவை நிலையங்கள் அமைக்கப்படும்
01.20 pm : கண்டியில் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக உலக வங்கியின் நிதி உதவியுடன் ஜனவரியில் புதிய திட்டம்.
01.19 pm : பாடசாலைகளில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கு 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
01.17 pm அநுராதபுரம் மகா விகாரை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும். அதன் ஆரம்ப கட்ட நடடிவக்கைகளுக்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
01.13 pm : வடக்கு – கிழக்கில் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்த 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
01.10 pm : கொழும்பில் தோட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
01.10 pm : நிர்மாணத்துறையை மேம்படுத்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
01.09 pm : பால் உற்பத்தியை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
01.06 pm : நாட்டின் மீன் நுகர்வில் 35 வீதமானவை வடக்கில் இருந்து பெறப்படுகிறது. அதனை மேம்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
01.06 pm : ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் கைத்தொழில்துறை மேம்படுத்தப்படும்.
01.03 pm : ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் கைத்தொழில்துறை மேம்படுத்தப்படும்.
01.01 pm : வைத்தியர்களின் நிபுணத்துவத்தை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக புதிய திட்டங்கள்.
12.58 pm : அனைவருக்கும் ஆங்கிலம் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை.
12.57 pm தொழில்முறைக் கல்வி மற்றும் அது தொடர்பான பயிற்சித் திட்டங்கள் மாகாண நிர்வாகத்துக்கு மாற்றப்படும்.
12.56 pm தேசிய உயர்கல்வி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்
12.54 pm இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த பாலங்கள்,வீதிகளின் புனரமைப்புக்காக 02 பில்லியன் ரூபா
12.53 pm : 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாக மாகாண நிர்வாகத்துக்குட்பட்ட பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை
12.51 pm : நான்கு பல்கலைக்கழகங்களை புதிதாக நிறுவ நடவடிக்கை
12.50 pm : நாட்டின் எதிர்காலமானது பொருத்தமான கல்வி முறைமையில் தங்கியுள்ளது.
12.49 pm : இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அனைத்து அமைச்சுகளிலும் பிரிவு
12.47 pm : மலைநாட்டுப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களை மையப்படுத்தி அபிவிருத்தித் திட்டங்கள்.
12.44 pm : பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை. அதற்காக 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
12.43 pm : குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடமிருந்து அறிவிடப்பட்ட 3000 ரூபா வீட்டு வாடகை நிறுத்தப்படும்.
12.42 pm : குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரச வீடுகள் அவர்களுக்கே வழங்கப்படும்.
12.38 pm : சிறிய நடுத்தர முயற்சியாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.
சிறிய, நடுத்தர முயற்சியாளர்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 30 பில்லியன் ரூபா நிதி உதவி
12.37 pm : அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மறுசீரமைப்பு
12.36 pm :அங்கவீனமுற்ற, சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு ரூ.5000
12.35 pm : அடுத்த ஆண்டு அஸ்வெசும பயனாளர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனாக அதிகரிக்கப்படும்.
12.30 pm : ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா அதிகரிப்பு
12.30 pm : ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – இந்தத் தொகை ஏப்ரல் முதல் வரவில் வைக்கப்படும்
12.30 pm : அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க யோசனை முன்வைக்கிறேன்.
12.29 pm : நான் இப்போது 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை சமர்ப்பிக்கிறேன்.
12.29 pm : இந்த வரவு- செலவுத்திட்டம் மாறுபட்டது. நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றிக்காக உருவாக்கப்பட்டுள்ளது
12.28 pm : 2022 இல் எமது நாடு வீழ்ச்சியடைந்ததைப் போன்ற நிலைமை உருவாக இடமளிக்க முடியாது. ஒரு சிலர் அதற்கு முயற்சிக்கிறார்கள்.
12.27 pm : இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வரி வருமானத்தை 50 வீதத்தால் உயர்த்த முடிந்தது.
12.26 pm : நமக்கு புதிய அரசியல், பொருளாதார முறைமை அவசியம். அதனால் முழுமையான மாற்றம் அவசியம்
12.25 pm : இதுவரை எமது நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகள் தவறானவை.
12.25 நுவரெலியாவின் அபிவிருத்திக்காகவே தபால் நிலையத்தை மறுசீரமைக்க எதிர்பார்க்கிறோம்.
அங்கு பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்படும்.
12.24 pm : நாட்டின் எதிர்காலத்துக்காக திருட்டில் ஈடுபட வேண்டாம் என நான் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
12.23 pm : ஊழல், மோசடிகள் நாடு முழுவதும் புற்றுநோய் போல பரவியுள்ளது.
12.22 pm : சில பிரச்சினைகளை மிகக் கவனமாக தீர்க்க வேண்டும்.
12.21 pm : அரச செலவினத்தை குறைப்பதன் ஊடாக மக்களின் சுமையை குறைக்கலாம் என சிலர் கூறுகிறார்கள்.
12.21 pm : வரிக் கொள்கையில் காணப்படும் குறைபாடுகளை நாம் அடையாளங்கண்டுள்ளோம்.
12.19 pm: அரச வருமானத்தை மொத்த தேசிய உற்பத்தியிலிருந்து 10-15 வீதம் வரை உயர்த்த வேண்டியுள்ளது.
12.18 pm: வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் வரை திட்டமிடல்கள் அவசியமாகிறது.
12.18 pm: இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதனால் பின்னடைவு ஏற்படும்.
12.18 pm: நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வரியில் மீள்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
12.17 pm: நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களைக் கொண்டுசெல்ல கடன் பெற்றுக்கொண்டோம்.
சம்பள உயர்வு கேட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
வேலை நிறுத்தம் காரணமாக செயற்பாடுகள் முடக்கப்படுகின்றன.
12.13 pm : வரி அதிகரிப்பினால் சாதாரண பொதுமக்கள் மாத்திரமல்லாமல் பல்வேறு துறைசார்ந்தோரும் பாதிக்கப்பட்டனர்.
12.13 pm : நாம் முகங்கொடுத்துவரும் நெருக்கடி நிலைமை இன்னும் முடிவுக்கு வரவில்லை இன்று நீண்ட வரிசைகள் இல்லாமல் பொருட்களைப் பெற்றுக்கொள்கிறோம்.
12.10 pm : மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் நாம் செல்லும் பாதை சரியானதாகும் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்ததை விட நாடு தற்போது முன்னேற்றம் கண்டிருக்கிறது.
அதற்காக நாம் பாரிய விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டிருக்கிறோம்.
12.09 pm : அதனால் இறுதியாக கிடைக்கும் பலன் நாடு வங்குரோத்தடையும் நிலை என்பதை நாம் கண்கூடாகக் கண்டோம்.நாட்டின் இறக்குமதிகளைக் குறைப்பதற்கு தற்காலிகமாக தீர்மானித்தோம்.
எனினும் அது நீண்டகாலத்துக்கு பொருத்தமானதல்ல.12.09 pm நமக்கு நட்புறவான நாடுகள் எமக்கு உதவின.மரணத்தை நெருங்கிய நோயாளியைப் போன்ற நாட்டை நான் பொறுப்பேற்றேன்.
12.08 pm : நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளானது.
பெற்றோலுக்காக சண்டைகள் இடம்பெற்றன
12.08 pm : நீண்ட வரிசைகள் காணப்பட்டன.பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தோம்.நாம் இதுவரை கடன் பெற்று அல்லது பணம் அச்சிட்டு செலவீனங்களை மேற்கொண்டோம்.
12.04 pm வரவு- செலவுத் திட்ட உரை ஆரம்பம்

12.03 pm நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது
12.02 pm : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்துக்கு வருகை
11.58 am பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.