உத்தரதேவியுடன் மோதுண்டு யானை உயிரிழப்பு!

0
145

முல்லைத்தீவு – முறிகண்டி ரயில் நிலையத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சுமார் 500 மீற்றர் தொலைவில் உத்தரதேவி ரயிலுடன் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த குறித்த ரயிலுடன் யானை மோதுண்டுள்ளது.

யானைகள் கடக்கும் இடம் என்ற எச்சரிக்கை அறிவித்தல் காணப்படுகின்ற பகுதியிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.