ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய நியமனம்

0
92

ஊவா மாகாணம் பசறை தொகுதியில் மக்களுக்கு சேவையாற்ற, ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளராக லெட்சுமனார் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி குறித்த நியமனம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.