பளையில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

0
128

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் பளை நகர பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குணம் கணேசன் வயது 20 என்பவரே பலியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் பளை நகரம் பளையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் பளை வைத்தியசாலை கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.