மிக்ஜம் புயல் நிவாரணத்திற்காக தமது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளதுடன் சட்டமன்ற ஊறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதிப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மிக்சம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்கான திருவள்ளுர், செங்கல்பட்ட, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பாரியளவில் பாதிக்கப்பட்டன.
பல இடங்களில் அதிகளவில் வெள்ளம் தேங்கி மக்கள் பாரிய அளெகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்து 750 பேர் 411 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மழை மற்றும் காற்று, வெள்ளம் காரணமாக 13 பேர் உயிலிழந்துள்ளனர்.
இந்நிலையில் மிக்சம் புயல் நிவாரணத்திற்காக தமது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அத்துடன் பொதுப்பணிக்கு நிதி வழங்கியவர்களுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.