உலகத் தமிழர் பேரவையினர் யாழ் ஆயரை சந்தித்து கலந்துரையாடினர்!

0
165

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர் யாழ் மாவட்ட ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் யாழ் மறைமாவட்ட ஆயரை இன்று மதியம் சந்தித்து அவருக்கு நாங்கள் மேற்கொள்ள உள்ள வேலை திட்டம் தொடர்பில் விரிவாக விளங்கப்படுத்தினோம் அவர் எமது திட்டத்தினை நல்ல ஒரு திட்டம் இதை நான் வரவேற்கின்றேன் மக்கள் மயப்படுத்தப்பட்ட திட்டத்தினைதான் வரவேற்பதாகவும் மேன்மேலும் இந்த விடயத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துமாறும் கோரினார் எனவும் தெரிவித்தார்