கலாநேத்ரா விருது தெரிவில் மோசடி : கலைஞர்கள் குற்றச்சாட்டு

0
216

வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் 2023ம் ஆண்டுக்கான கலாநேத்திரா விருது தெரிவுகள், துறைசார்ந்த நிபுணர்கள் இன்றி இடம்பெற்றுள்ளதாக கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கலாநேத்ரா விருதானது நாடக எழுத்துரு, கீழைத்தேச இசை, மேலைத்தேய இசை, பரதம், குறும்படம், ஊடகம், மரபு இசை உட்பட 18 துறைகளிற்கு வழங்கப்படுகிறது.

ஐந்து பேர் கொண்ட துறைசார்ந்த நிபுணர்களினால் மேற்கொள்ளப்படும் என இவ் விருதுகளிற்கான விண்ணப்பகோரலின் போது வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசனால் அறிவிக்கப்பட்ட போதும் அவ்வாறு இடம்பெறவில்லை என கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறான தெரிவிக்குழுவினால், திறமையான பல கலைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் தெரிவிக்கையில்,
‘தெரிவுக்குழுவில் துறைசார்ந்த யாரையும் நாம் தெரிவுசெய்யவில்லை, ஒவ்வொரு துறைக்கும் தனித் தனியாக நபர்கள் இல்லை என்றாலும் கலைத்துறையில் அனுபவம் வாய்ந்த நபர்களே உள்ளனர். மேலும், சான்றிதழ்களையும், விருதுகளையும் வைத்தே விருதுகள் வழங்கப்படுகின்றன’ என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தனியார் துறைகள் ஊடாக வழங்கப்பட்ட அல்லது பணம் செலுத்தி பெறப்பட்ட விருதுகளும் சான்றிதழ்களும் இந்த தெரிவில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக கலைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.