கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு விநியோகத் திட்டம் மட்டக்களப்பு கிரான் கோறளை தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில்
இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபுவின் ஆலோசனையின் பேரில் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய பல நோக்கு கூட்டுறவு சங்க நிர்வாகம் இத்
திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் அ.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் எம்.விஜேந்திரராஜா,
அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் பார்த்தீபன் மற்றும் பொது முகாமையாளர் சி.சிவசுதன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 16 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார் இவ் அரச உதவியினை பெற்றுக்கொள்ளும் நன்மை
கிடைத்துள்ளது.
மாதாந்தம் 4 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான போசக்கு உணவுகள் வழங்கப்படவுள்ளது.