கிழக்கு மாகாணத்தில் வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இடை நிறுத்தப்பட்ட வீதிகளின் புனரமைப்புப் பணிகளை முழுமைப்படுத்துமாறு
இராஜாங்க அமைச்சர் சிவநேதுரை சந்திகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தித் திட்டம் தொடர்பில், இன்று கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து
துரிதமாக பணிகளை முடிக்குமாறு ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தித் திட்டத்தின் திட்டப் பணிப்பாளருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை
விடுத்தார்.
பணிகள் நிறைவடைந்துள்ள வீதிகளில் வீதி அடையாளங்கள், பெயர் பலகைகளை நிறுவுதல், வீதிகளில் வெள்ளைக் கோடுகள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் அடையாளங்கள் போன்ற பணிகளை துரிதமாக முடிக்கவும் செயற் திட்ட பொறியியலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வீரசிங்க, கபில அதுகோரல, கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ரணவீர, ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Home கிழக்கு செய்திகள் கிழக்கு மாகாணத்தில் வீதி அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.