அம்பாறை அக்கரைப்பற்றில் கனமழை: மின்னல் தாக்கத்தால் மக்கள் பாதிப்பு

0
140

அம்பாறை அக்கரைப்பற்றில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட, மின்னல் தாக்கத்தினால்,
பொதுமக்களது நாளாந்த பாவனைக்குரிய இலத்திரனியல் பொருட்கள் சேதடைமந்துள்ளன.
ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் நேற்றிரவு கன மழை பெய்தது.
இதன்போதே மின்னல் தாக்கமும் ஏற்பட்டுள்ளது.
வாச்சிக்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவில் சிறிய குடிசைஒன்றின் மீது மரக்கிளை முறிந்துவீழ்ந்தால், குடிசை சேதமடைந்தது.
தாழ் நிலப்பகுதிகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வீதிகளும் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது.