28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

7 மீனவர்களுக்கு மரண தண்டனை !

இலங்கை கடற்பரப்பில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில் 2012 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் படகொன்றை கடத்தி அதிலிருந்த 3 மீனவர்களை கொலை செய்ததுடன் மேலும் சிலருக்கு காயத்தை ஏற்படுத்தியதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு தொடர்பான நீண்ட விசாரணையை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேவினால் இன்று குறித்த 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles