யாழ். சங்குவேலியில், பாரம்பரிய முறைப்படி வயலில் புதிர் எடுக்கும் நிகழ்வு

0
135

தைப்பூசத்தை முன்னிட்டு, பாரம்பரிய முறைப்படி வயலில் புதிர் எடுக்கும் நிகழ்வு, இன்று, யாழ்ப்பாணம் சங்குவேலியில் இடம்பெற்றது.

சங்குவேலி வயலில் விளைந்திருந்த நெற் கதிர்களை, அப்பிரதேச விவசாயிகள், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று, சூரியனுக்கு வணக்கம் செலுத்தி அறுவடை செய்தனர்.

நெற் கதிர்களை தலையில் சுமந்து சென்று மாட்டு வண்டிலில் ஏற்றி, பாரம்பரிய முறைப்படி, உடுவில், மருனார்மடம் ஊடாக இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்து காணிக்கையாக வழங்கினர்.

இப்பாரம்பரிய நிகழ்வு, ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.