அம்பாறை மாவட்ட அரசஅலுவலகங்களிலும் தைப்பொங்கல் நிகழ்வுகளும் விவசாயிகளைகௌரவிக்குமநிகழ்வும்; தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றன.
ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திலும் பிரதேசசெயலாளர் வி.பபாகரன் தலைமையில் இன்று பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் விழாவில் விவசாயத்திற்கு உதவிசெய்யும் பசுக்களுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் விவசாயிகளும்
கௌரவிக்கப்பட்டனர்.
தைபிறந்தால் வழிபிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்; சூரிய பகவானுக்கு நன்றிசெலுத்தும் வகையில் பொங்கலிட்டு பூஜை
வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
உதவிப் பிரதேசசெயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பிரதேசசெயலகஉத்தியோகத்தர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பூஜைவழிபாடுகளை சிவஸ்ரீ ஜெகதீஸ்வர சர்மா நடாத்திவைத்தார்.